untitled poems

By , and | 1 October 2016

சட்டியில் பண்ணி ரத்தம் ஊத்தி
கருப்பட்டியும் எள்ளும்
வெரவித் திண்ணு
கொலை நடுங்க ஆடும் சாமி

எங்களுக்கும் பிடிப்பதில்லை
மரக்கறி



***

சிலர் பழசையெல்லாம்
மறந்து விடுகிறார்கள்

ஆனாலும் எல்லாம் கண்முன்
மிதந்து கொண்டிருக்கிறது

கடலில் பிடித்து முதலில் விற்ற
மீன் குட்டையின்
செள்ளுகள் ஒட்டிய
உண்டியல் காசுகள்.

கருவாடு விற்ற காசில்
வாங்கி வைத்த சூடத்தின்
வெளிச்சம் கண்டு சிரித்த மூக்குத்தி

கோவிலுக்குள் வைத்து ஆக்கிய
மீன்குழம்பின் வாசத்தில்
ருசி கண்ட பூனையாய்
தொங்க போட்டுக் கொண்டிருந்த
அம்மனின் நாக்கு

எல்லாம் நேற்று நடந்தவை
போல் இருக்கிறது.

கடைசியாக கலவரத்துக்கு
முந்தைய திருவிழாவில்

மண்டைக்காட்டு அம்மன்
கோவிலில் வைத்து சந்தித்தது

This entry was posted in 76: DALIT INDIGENOUS and tagged , , . Bookmark the permalink.

Related work:

  • No Related Posts Found

Comments are closed.